NECF 40 நாள்கள் உபவாசப் பிரார்த்தனை

7 ஆகஸ்ட் – 15 செப்டம்பர் 2021

இந்த ஆண்டு 40 நாள்கள் தேசிய உபவாசப் பிரார்த்தனையில் நீங்கள் பங்கேற்கிறீர்கள் என்பதில் நாங்கள் மிகவும் ஆசிர்வதிக்கப்பட்டு இருக்கிறோம்.

 

இந்த இணைய அகப்பக்கத்திலிருந்து (http://tiny.cc/40daysbooklet) NECF பிரார்த்தனை வழிகாட்டியை நாங்கள் பதிவிறக்கம் செய்துள்ளோம்.  நீங்கள் உங்கள் கைப்பேசியில் NECF பயன்பாட்டை (App) அணுகி, பிரார்த்தனை கையேட்டைப் பதிவிறக்கம் செய்யலாம்.

 

நீங்கள் என்ன செய்ய முடியும்:

 

NECF பிரார்த்தனை கையேட்டில் தினசரி வழிபாடு, பைபிள் வாசிப்பு மற்றும் பிரார்த்தனை வழிகாட்டி உள்ளது.

 

நீங்கள் ஒவ்வொரு நாளும் அதைப் பின்பற்றலாம். அல்லது நீங்கள் தேர்ந்தெடுத்த ஜெப அரண் நாள்களின் நேரங்களையும் தேர்வு செய்யலாம்.

 

நீங்கள் ஒரு நாளைக்கு ஒரு வேளை (உணவு) உபவாசம் இருந்து குழுவாக ஜெபிக்கலாம். உங்கள் திருச்சபையின் மற்றவர்களுடனும், பிரார்த்தனை வலையமைப்புடனும் இணைந்து ஜெபக்கவும் உங்களை ஊக்குவிக்கிறோம்.

 

MUFWஇல் திங்கள் முதல் வெள்ளிக்கிழமை வரை காலை மணி 6 – 8 வரை அனுசரிக்கும் கூட்டுறவுப் பிரார்த்தனையில் பின் இணைப்பில் (http://tiny.cc/mufw40days) எங்களுடன் சேருங்கள்.

ஜெப குறிப்புகள்

பின்வரும் ஜெப குறிப்புகள் NECF இன் 40 நாட்கள் உபவாசம் மற்றும் ஜெபம் 2021 கையேட்டில் இருந்து எடுக்கப்பட்டது:

இப்போது எங்கள் 9 ஆவது பிரதமர் அதிகாரப்பூர்வமாகப் பதவி ஏற்றுள்ளார்.

 

கடவுளிடம் எதையாவது கேட்பதை விட பிரார்த்தனையும் பரிந்துரையும் அதிகம். இது கர்த்தரோடு இணைகிற ஒன்றாகும். இவ்வாறு செய்வதன் மூலம், அவரின் செயற்பாடுகளில் பங்கு ஏற்கிறோம்.

 

நமது மனிதனின் வரையறுக்கப்பட்ட தொலைநோக்கு, அவனது எல்லையற்ற ஞானம் மற்றும் தூரநோக்கு பார்வை காரணமாக, அவரின் செயற்பாடுகளை நாம் எப்போதும் புரிந்து கொள்ள முடியாது. மேலும், அவருடைய திட்டங்களையும் நோக்கத்தினையும் முழு நிலையில் பார்க்க முடியாது.

 

ஏசாயா 55: 8-9

“என் எண்ணங்கள் உங்கள் எண்ணங்கள் அல்ல; உங்கள் வழிகளும் என் வழிகள் அல்ல” என்று கர்த்தர் சொல்லுகிறார்.

“பூமியை விட வானங்கள் எவ்வளவு உயர்ந்து இருக்கிறதோ, அப்படியே உங்கள் வழிகளை விட என் வழிகளும், உங்கள் எண்ணங்களை விட என் எண்ணங்களும் உயர்ந்திருக்கின்றன”.

 

என் அனைத்துச் சகப் பரிந்துரையாளர்களே, மலேசியாவுக்கான நமது பிரார்த்தனைகளைக் கர்த்தர் கேட்டுப்பயன்படுத்தினார் என்பதை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டுமென விரும்புகிறேன். மலேசியாவுக்கான அவரது திட்டங்களும் நோக்கங்களும் நிறைவேறும் என்பதை உணர்ந்து தொடர்ந்து ஊக்கமுடன் பிரார்த்தனை செய்வதை ஊக்குவிப்போம்.

 

கர்த்தரின் நோக்கம் நிறைவேறாத வரை, இது இறுதி அல்ல.

 

சங்கீதக்காரன் 33: 10-11 இல் அறிவிக்கிறார்

“கர்த்தர் ஜாதிகளின் ஆலோசனையை விருதாவாக்கி, ஜனங்களுடைய நினைவுகளை அவமாக்குகிறார்.

கர்த்தருடைய ஆலோசனை நித்தியகாலமாகவும், அவருடைய இருதயத்தின் நினைவுகள் தலைமுறை தலைமுறையாகவும் நிற்கும்.”

 

பரலோகத் தந்தையே, இன்று மலேசியாவில் உங்கள் எல்லையற்ற ஞானத்தின் மூலம் எங்களை வளர்த்ததற்கு நன்றி.  மலேசியாவின் இறுதி நோக்கத்திற்கான இடைவெளியில் நின்று எங்களை உம் முன் சமர்ப்பிக்கிற வேளையில்எங்களைப் புதிதாக அபிஷேகம் செய்யும்படி கேட்கிறோம்.

 

எங்கள் தேசத்தின் மீதான எங்களின் மிகுந்த அன்பை தொடர்ந்து கொடுங்கள்.

மலேசியாவுக்கு “உங்கள் ராஜ்யம் வரவும் மற்றும் உங்கள் நோக்கம் நிறைவேற வேண்டும்” என்று அறிவிக்கிறோம்

 

ஆண்டவரே, எங்கள் தேசத்தை உமது மேலான கருணையால் நிரப்பி, எங்கள் எல்லா பாவங்களையும் மன்னியுங்கள்;உங்கள் நீதி, கருணை மற்றும் தீர்ப்பே மேலோங்கட்டும்.

 

எங்கள் புதிய பிரதமரை உங்கள் கையில் ஒப்படைக்கிறோம்.

அவரது தலைமைத்துவத்தையும் அரசாங்கத்தையும் ஆசீர்வதியுங்கள். தன்னையும், தனது அரசியல் கட்சியையும் தாண்டி, மலேசியாவை வழிநடத்துவதற்கும் நிர்வகிப்பதற்கும் அவருக்கு ஞானம் கொடுங்கள்.

 

தீய ஆலோசகர்களிடமிருந்தும் மனிதனின் வஞ்சகத்திலிருந்தும் அவரைப் பாதுகாக்கவும்.  தேசத்தின் நலனில் அக்கறை கொண்ட திறமையான ஆண்களும் பெண்களும் அவரைச் சூழ்ந்து கொள்ளவும், அதையே எல்லாவற்றையும் விட முக்கியமானதாக எண்ணவும் செய்யுங்கள்.

 

ஆண்டவரே, எங்களுக்குச் சிறந்த குறியிலக்கு, ஆற்றல் மற்றும் எண்ணங்கள் கொண்ட அமைச்சரவை வழங்குங்கள்.

 

பரலோகத் தந்தையே, எங்களின் புதிய பிரதமருக்குக் கோவிட் 19 தொற்று நோயையும் வீழ்ச்சியடைந்த பொருளாதாரத்தையும் எதிர்த்துப் போராடுவதற்கான திட்டங்களை அமுல்படுத்தும் மனநிலையைக் கொடுங்கள்.

 

மதம், இனம் பின்னணியைப் பொருட்படுத்தாமல், அனைத்து மலேசியர்களின் தலைவராகச் சிந்திக்கும் விருப்பத்தையும் தைரியத்தையும் அவருக்குக் கொடுங்கள்.

 

எங்கள் அரசியல் தலைவர்கள் நேர்மை, நீதி மற்றும் திறமைக்கு உதாரணமாக இருக்கட்டும். உங்கள் நோக்கத்திற்கு இடையூறு செய்பவர்கள் நீக்கப்பட்டு இயேசுவின் நாமத்தில் கட்டப்படட்டும்.

 

கர்த்தராகிய இயேசுவே, உங்கள் திருச்சபைகளின் மீது உங்கள் பரிசுத்த ஆவியைத் தொடர்ந்து ஊற்றவும்.

 

இத்தகுந்த நேரத்தில் இம்முயற்சியில் நம்பிக்கையின் ஆவியும் ஆறுதலும் எழட்டும்.

 

இவ்வேளையில் நாங்கள் உப்பாகவும் விளக்காகவும் இருக்க எங்களுக்கு உதவுங்கள். சந்தை செல்வாக்கு உள்ளவர்கள், அரசியல் செல்வாக்குத் தாக்கம் உள்ளவர்கள், தெய்வீகத் தாக்கம், ஒருமைப்பாடு மற்றும் நீதியைக் கொண்டுவரவும், குறிப்பாக அரசியல் தொடர்பான காரியங்களில் நேர்மையான வழியில் நடக்க உதவுங்கள்.

 

“ஜோசப்ஸ் மற்றும் டேனியல்ஸ்” தெய்வீக ஆதரவுடன்  எழுப்பி உயர்த்தவும் அவர்களைச் செல்வாக்குள்ள இடங்களில் வைக்கவும். எங்கள் வேலையிட சந்தை தலைவர்கள் லாபத்தை மட்டும் சிந்திக்காமல், அதற்கு அப்பாற்பட்டும் சிந்திக்கவும் செய்யுங்கள்.

 

ஆண்டவரே, சரியானதைச் செய்யும்போது சோர்வடையாமல் இருக்க எங்களுக்கு உதவுங்கள், எங்கள் போக்கில் இருக்க எங்களை வலுப்படுத்தி, உங்களையும் உங்கள் நோக்கத்தையும் கவனத்தில் கொள்ளவும் உதவுங்கள்.

 

இவை அனைத்தையும் நம் ஆண்டவரும் இரட்சகருமாகிய இயேசு கிறிஸ்துவின் வல்லமை பொருந்திய நாமத்தில் கேட்கிறோம்.

 

ஆமென்

 

வாரம் 25-29 – நடவடிக்கைகான அழைப்பு