வாரம் 25 – 29 – நடவடிக்கைகான அழைப்பு

 

நடவடிக்கைக்கு அழைப்பு – ஒரே நோக்கத்திற்கான சிறிய குழு பிரார்த்தனை

இந்த 40 நாள்கள் உபவாசம் மற்றும் பிரார்த்தனையின் போது, 2-3 பேர் கொண்ட சிறிய குழுவில், உங்கள் ஜெபக்குழு / திருச்சபை / பிரார்த்தனை வலைப்பின்னல் / போதகர் ஐக்கியம் குழு முதலியவற்றில் ஒன்றிணைந்து  நம் தேசத்தின் தொற்று நோய், அரசியல் நெருக்கடி முதலியவற்றிற்கு ஒரு மனப்பட்டு, ஒன்றாகப் பிரார்த்தனை செய்ய நாங்கள் ஊக்குவிக்கிறோம். இது வாரத்திற்கு குறைந்தது ஒரு மணிநேரம் (ஆன்லைன் அல்லது தொலைபேசி) ஜெபிக்கவும் ஊக்குவிக்கிறோம்.

 

அப்போஸ்தலர் 1: 14-15

“…… அவர்கள் ஒரு மனப்பட்டு, ஜெபத்திலும் வேண்டுதலிலும் தரித்திருந்தார்கள்.”

 

  1. தற்போதைய அரசியல் சூழ்நிலையைக் கர்த்தரின் அரியணைக்கு முன் கொண்டு வருவோம். (சங்கீதம் 75ஐ நம் தேசத்தின்பால் பிரார்த்தனை செய்யுங்கள்)

 

  1. தொற்றுநோய் குறித்து நாம் தொடர்ந்து கர்த்தரின் தயவைத் தேடுவோம் (மத்தேயு5:14-16)

 

கிரெஸ்ட் தனிமைப்படுத்தல் மையம் மற்றும் தேவாலயங்களின் தொற்றுநோய்

அழைப்பு மையத்திற்காக எங்களுடன் சேர்ந்து பிரார்த்தனை செய்ய வாருங்கள்

 

சிறப்பு பிரார்த்தனை கோரிக்கைகள்.

 

  1. கோலாலம்பூரில் உள்ள டிராவல் லாட்ஜ் சிட்டி சென்டரில் (Travel Lodge City Centre, Kuala Lumpur) உள்ள B40 க்ரெஸ்ட் கியாரன்டைன் சென்டருக்காக (CREST QUARANTINE CENTRE) பிரார்த்தனை செய்ய எங்களுடன் சேருமாறு உங்களைக் கேட்க விரும்புகிறோம்.

 

இயற்கைக்கு அப்பாற்பட்ட நிலையில் CRESTக்கு இந்த வாரம் கோவிட் தொற்றுப் படிநிலை 1 மற்றும் 2தனிமைப்படுத்தப்பட்ட மையத்தை இயக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இத்திட்டம் கடவுளுடையது என்று நாங்கள் நம்புகிறோம். மேலும், இது போன்ற பல மையங்கள் மலேசியாவில் அமைக்க வழி வகுக்கலாம்.

 

  • இந்த மையம் பரிசுத்த ஆவியின் பிரசனத்தால் நிரப்பப்பட பிரார்த்திப்போம். அங்குத் தங்கியிருக்கும் அனைவரும் இறைவனின் பிரசனத்தால் நிரப்பப்பட பிரார்த்திப்போம்.
  • அங்குக் கிறிஸ்துவின் இயற்கைக்கு அப்பாற்பட்ட குணப்படுத்தும் வல்லமையால் நிரப்பப்படவும், அங்குள்ளநோயாளிகள் மற்றும் சேவை செய்யும் அனைவரின் மன அமைதி மற்றும் அன்பின் மிகுந்த உணர்வுக்காகப்பிரார்த்தனை செய்யுங்கள்.
  • அனைத்து நோய்த் தொற்றுகளிலிருந்தும் கிறிஸ்துவின் இரத்தத்தால் அனைத்து மருத்துவ மற்றும் தன்னார்வலர்களும் முற்றிலும் பாதுகாக்கப்பட ஜெபியுங்கள். (தொண்டர்கள் மீது சங்கீதம் 91யை ஜெபியுங்கள்)
  • MOH, CAC மற்றும் பிற அரசாங்க அதிகாரிகளுடன் பணிபுரியும் Crest குழுவினரின் ஞானத்திற்காக ஜெபியுங்கள்.
  • அனைத்து நிதி தேவைகள், மருத்துவ மற்றும் மருத்துவமற்ற தன்னார்வத் தொண்டர்களுக்காகவும் பிரார்த்தனை செய்யுங்கள்.

 

  1. KVPF அழைப்பு மையத்திற்கு (A.R.E. Lifeline) பிரார்த்தனை

 

இந்த அழைப்பு மையம் (call centre) கிள்ளான் பள்ளத்தாக்குத் திருச்சபைகளால் அமைக்கப்பட்டது. இது கிள்ளான் பள்ளத்தாக்கிலுள்ள மக்களின், குறிப்பாக விளிம்பு நிலையிலுள்ள சமூகங்களைச் சேர்ந்தவர்களின் தேவைகளைப் பூர்த்திச் செய்வதற்காக அமைக்கப்பட்ட ஒன்றாகும்.

  • எல்லா தொண்டர்களும் இறைவனின் ஆவியால் வழிநடத்தப்படுவதற்காகப் பிரார்த்தனை செய்யுங்கள். அவர்கள்பயம், கவலை, நிதி மற்றும் உடல் தேவை உள்ளவர்களுக்குத் தொலைபேசி மூலம் சேவை செய்கிறார்கள்.
  • குணப்படுத்துதல், அடக்குமுறை மற்றும் மனச்சோர்வு மற்றும் ஆன்மாக்களின் இரட்சிப்பு ஆகியவை இருக்க இறைவனிடமிருந்து இயற்கைக்கு அப்பாற்பட்ட கிருபை மற்றும் தயவுக்காகப் பிரார்த்திப்போம் (ஏசாயா 61: 1-3 பிரார்த்தனை செய்வோம்)
  • தன்னார்வலர்களால் நிர்வகிக்கப்படும் அழைப்பு மையம் முழுமையாக கர்த்தரின் ஞானத்தால் நிரப்பப்படஜெபியுங்கள். அவர்கள் இறைவனின் மகிழ்ச்சியை அனுபவிக்க பிரார்த்தனை செய்யுங்கள். அவர்கள் சேவை செய்யும் போது சோர்வால் தாக்கப்படாமல் இருக்கப் பிரார்த்தனை செய்யுங்கள்.
உள் நுழை